பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
தேவையான பொருட்கள்
- பன்னீர் -10 பீஸ்
- தக்காளி -5
- வெங்காயம் -4(பெரியது )
- பால் -1/2கப்
- முந்திரி -10
- கிராம்பு -4
- பட்டை இழை -1/2
- தனியா பொடி -1ஸ்பூன்
- சீரகம் பொடி -1/2ஸ்பூன்
- மஞ்சள் பொடி -1/2ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது -1/2ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய் பொடி -1ஸ்பூன்
- ஆயில் -1ஸ்பூன்
- வெண்ணெய் -2ஸ்பூன்
- ஏலக்காய் -3
- கசூரி மேத்தி காய்ந்த இழை -1ஸ்பூன் (Kasoori methi)
- உப்பு -தேவையான அளவு
செய்முறை
பன்னீரை சதுர வடிவங்களாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 45 நிமிடங்கள் போட்டு வைக்கவும் .
பாலில் முந்திரியை ஊர வைத்து மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும் .
கடாயில் ஆயில் விட்டு வெங்காயத்தை சிவக்க வறுத்து கொள்ளவும்
.தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்களுக்கு பின் தோல் உறித்து கொள்ளவும்
.பிறகு வெங்காயம் , தக்காளியை தனித்தனியாக மிக்ஸ்யில்அரைத்து கொள்ளவும்
.கடாயில் வெண்ணெயை போட்டு உருகிய பின்
கிராம்பு ,பட்டை இழை ,ஏலக்காய் இவை அனைத்தையும் போட்டு 1நிமிடம் வதக்கவும் .
பின் இஞ்சி ,பூண்டு விழுதை சேர்த்து அரைத்த வெங்காய விழுதை போட்டு 1நிமிடம் வதக்கிய பிறகு தக்காளி விழுதை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.பின்
Kasoori methi போடவும்
.பின் மஞ்சள் பொடி ,தனியா பொடி ,மிளகாய் பொடி ,
சீரக பொடி,உப்பு சேர்த்து இவை அனைத்தையும் போட்ட பின்
.பாலில் அரைத்த முந்திரியை சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
. பின் ஒரு சின்ன கடாயில்.ஆயில் விட்டு ஊர வைத்துள்ள பன்னீரை போட்டு 1 நிமிடம் வதக்கி.
கொதித்து கொண்டிருக்கும் கிரேவியுடன் சேர்த்து 1 நிமிடம் கொதித்த பின் இறக்கி வைத்து பரிமாறவும் .
பின் குறிப்பு
1. பன்னீர் பட்டர் மசாலா கிரேவி :சப்பாத்தி ,ரொட்டி ,நாண் ,குல்சா இவை அனைத்துக்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் .
2.தேவையானால் கடைசியில் பிரெஷ் கிரீம் சேர்க்கலாம்
nallayirukkadhunu nanaicha aana suuuuuuuuuuuuuper
ReplyDeleteYou can also try other recipes from the blog..
Delete